C1

Bala

Thursday, August 14, 2014

நண்பர்கள் தினம்!!



இன்று நண்பர்கள் தினம்!!

"உன் நண்பனைச் சொல்; நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்!" என்று ஒரு வாக்கியம் உண்டு...

நண்பர்களைத் தேர்ந்து எடுப்பதில் கவனம் வேண்டும்.
"மச்சி!! ஓப்பன் த பாட்டீல்!" என்பதல்ல நல்ல நட்பு...

நாம் தவறாக நடக்க முற்படுகையில், நம்மைத் தடுத்து சரியான பாதையினைக் காட்டுவதே நல்ல நட்பு.

உன் மனசு பாரமாயிருக்கும் போது...
உன் நண்பனைப் போய் பார்...
உன் மனசு லேசாகும்!!

அவன் கரம் பற்றி நடக்கும் போதும்...
அவன் தோளில் நீ சாயும் போதும்...
உனக்குள் இருக்கும் அந்த பாரம் மெல்லக் குறைவதை
உணர முடியும்...

நட்பு என்பதும் சாதாரணமானது அல்ல!!
அதுவும் ஒரு தேன் கூடு போலத் தான்...
கட்டிப் பார்த்தவர்களுக்குத் தான்
அதன் இனிமை தெரியும்!!
அதைக் கலைக்க நினைப்பவர்களும்
நிச்சயம் தொலைந்து தான் போவார்கள்!!

வருடங்கள் பல கடந்தாலும் இன்னும் நம்மை இளமையாகவே வைப்பது நம் நட்பும், நல்ல நண்பர்களும் தான்!!
நாம் பழகும் அத்தனை பேரும்
நமக்கு நண்பர்கள் ஆகி விட முடியாது...
வேலை நிமித்தம் சிலர் பழகலாம்...
இருக்கும் இடத்தில் சிலர் பழகலாம்...

உன் தோள் பற்றும் தோழமை...உன் நண்பனிடம் மட்டுமே இருக்கும்...

இந்தப் பதிவோடு நான் இணைத்திருக்கும் படத்தில் நான் என் நண்பர்களோடு இருக்கிறேன்!! 90 களில் தொடங்கிய நட்பு இது!!
இருபத்து ஐந்து வருடங்கள் கடந்து போனதை நினைத்தால் மலைப்பாகவே இருக்கிறது...இந்தப் படத்தில் சாய்ந்து நிற்கும் என் நண்பன் செந்தில் மட்டும் இப்போது எங்களோடு இல்லை!!

இப்பவும் எங்கள் மனசுக்குள் அவன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்!!
நல்ல நண்பன் அமைவதும் கூட அப்படித்தான்!!

No comments:

Post a Comment