C1

Bala

Thursday, August 14, 2014

ஆடி அமாவாசை!!


இன்று ஆடி அமாவாசை!!
முன்னோர்களை நினைத்து வணங்கும் நாள்!!

இருக்கும் வரை யாரும் யாரையும் மதிப்பது இல்லை...
அதற்கு நம்முடைய வேலையையும் வந்து செல்ல ஆகும் செலவையும் கூட காரணமாகச் சொல்லுவது உண்டு!!
இல்லாமல் போன பிறகு...

படத்தில் இருப்பது என்னுடைய அம்மா ஆச்சியும், தாத்தாவும்.
அவர்களை அவ்வப்போது அவர்களது வீட்டுக்குப் போய் பார்த்து விட்டு வருவது வழக்கம்...அப்போது ஆச்சி போட்டுத் தரும் பால் இல்லாத காபியும், தாத்தா உடனே கடைக்குப் போய் பேரப் பிள்ளை வந்திருப்பதாகச் சொல்லி வாங்கி வரும் வடையும் இன்றும் நினைவில்...

ஆச்சி கிராமத்தில் இருந்தாலும் ரொம்பவே மாடர்ன்!!
போகும் போதெல்லாம் தொலைக்காட்சியில் சொல்லித்தரும் ரெஸிபிக்களை வைத்து புதுசு புதுசாக எதாவது செய்து தருவார்கள்!! ஒரு நாள் அவர்கள் தந்த கேரட் அல்வா இப்போதும் இனிக்கிறது!!

வளர்ந்து பெரியவனாக நாம் இருந்தாலும், நம்மையும் குழந்தையாகவே பார்க்கும் அந்தப் பாசமும் பிரியமும்...இப்போது நினைத்தாலும் சுகமாகவே இருக்கிறது!!

இன்று இருவருமே இல்லை!!
அந்த கிராமத்தை இன்றும் கடந்து போகையில்...
அவர்கள் வசித்த அந்த வீடும் கடந்து போகிறது...
ஆனால், இப்போது இந்தப் படத்தில் பார்ப்பது போலவே
அவர்கள் நிற்பது போல் தோன்றுவதும், மனசிற்குள் ஒரு பந்து உருளுவதையும் உணர முடிகிறது!!


1 comment: